உள்ளூர் செய்திகள் (District)

சைதாப்பேட்டையில் சிலிண்டர் வெடித்து 5 பேர் காயம்

Published On 2023-02-11 09:46 GMT   |   Update On 2023-02-11 09:46 GMT
  • சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் இவர்கள் 5 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
  • 5 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை சைதாப்பேட்டை சூரியம்பேட்டை பகுதியில் வனிதா, புண்ணியகோட்டி, நித்தியா, ஆறுமுகம், நித்யானந்தா, ஆகியோர் தொண்டு நிறுவனங்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் பணியினை செய்து வருகின்றனர்.

சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் இவர்கள் 5 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். 5 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வனிதா, புண்ணியகோட்டி, ஆகிய இருவரும் 70 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடனும், நித்தியா 41 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடனும், நித்தியானந்தா 43 சதவீத தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறுமுகத்துக்கு 32 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்று பார்த்தார்.

Tags:    

Similar News