உள்ளூர் செய்திகள் (District)

ஓ.பன்னீர்செல்வத்திடம் வரவு-செலவு விபரம் ஒப்படைப்பு

Published On 2022-06-22 07:02 GMT   |   Update On 2022-06-22 07:02 GMT
  • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியையும் வகித்து வருகிறார். பொதுக்குழு கூட்டங்களில் பொருளாளர்தான் கட்சியின் வரவு-செலவு விவரங்களை வாசித்து தாக்கல் செய்வார்.

அதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும். அதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் உரசல் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.

நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News