உள்ளூர் செய்திகள் (District)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1014 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-06-15 04:37 GMT   |   Update On 2023-06-15 04:37 GMT
  • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.59 அடியாக உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.97 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1014 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.59 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.21 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.28 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News