உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-12 08:03 GMT   |   Update On 2023-03-12 08:03 GMT
  • என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.
  • என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.

என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழித் தேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும், முன்னாள் எம்.பி. சந்திர காசு, முன்னாள் எம்.எல்.ஏ. முருகமாறன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News