உள்ளூர் செய்திகள் (District)
வேட்பாளர் ஆய்வில் தி.மு.க. தீவிரம்!
- தி.மு.க.வில் போட்டியிட டிக்கெட் கேட்டு இப்போதே பலர் முயற்சித்து வருகிறார்கள்.
- ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மூன்று பேர் வாய்ப்பு கேட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடுகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில் தி.மு.க.வினர் கூட்டணி கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் தி.மு.க.வில் போட்டியிட டிக்கெட் கேட்டு இப்போதே பலர் முயற்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் வாய்ப்பு கேட்பவர்களை தி.மு.க. தலைமை ஆய்வு செய்து வருகிறது.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஞானதிரவியம், பூங்கோதை ஆவடி அருணா மற்றும் சபாநாயகர் அப்பாவு மகன் ஆகியோர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மூன்று பேர் வாய்ப்பு கேட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.