உள்ளூர் செய்திகள் (District)

பெரியார் படத்தை எடுத்து சென்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்- ஓ.பன்னீர்செல்வம் தவிப்பு

Published On 2022-09-17 10:14 GMT   |   Update On 2022-09-17 10:14 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த வந்தார்.
  • பெரியார் உருவப்படம் இல்லாததது கண்டு ஓ.பன்னீர்செல்வம் திகைத்து போய் நின்றார்.

சென்னை:

பெரியார் பிறந்த நாளையொட்டி, இன்று சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த உருவ படத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் திரண்டு வந்து பெரியார் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வருவதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனே நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் பெரியார் படத்தை அங்கிருந்து கையோடு தூக்கி சென்றனர்.

சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த வந்தார். அங்கு பெரியார் உருவப்படம் இல்லாததது கண்டு அவர் திகைத்து போய் நின்றார். அவரது ஆதரவாளர்களும் என்ன செய்யலாம் என்பது தெரியாமல் விழித்தனர். அந்த சமயம் அ.ம.மு.க தொண்டர்கள் பெரியார் படத்துடன் அங்கு வந்தனர்.

இதனால் வேறு வழியில்லாமல் அந்த படத்தை சிலைக்கு கீழ் வைத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த சம்பவம் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News