உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கரணையில் மின் கம்பத்தில் ஏறிய தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியது

Published On 2023-02-05 08:20 GMT   |   Update On 2023-02-05 08:20 GMT
  • மது போதையில் இருந்த அண்ணாமலை அதே பகுதி துலுக்காத்தம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென ஏறினார்.
  • மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு போராடிய அண்ணாமலையை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வேளச்சேரி:

பள்ளிக்கரணை அருண் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது45). இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். அண்ணாமலை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

இந்த நிலையில் மது போதையில் இருந்த அண்ணாமலை அதே பகுதி துலுக்காத்தம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென ஏறினார்.

அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News