உள்ளூர் செய்திகள் (District)

கேளம்பாக்கம் அருகே மீனவர் மர்ம மரணம்

Published On 2023-01-06 09:24 GMT   |   Update On 2023-01-06 09:24 GMT
  • பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார்.
  • கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்போரூர்:

கோவளத்தை அடுத்த குன்னுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 46). மீனவரான இவர் பக்கிங்காம் கால்வாயில் படகுமூலம் மீன், இறால், நண்டு ஆகியவற்றைப் பிடித்து வந்தார். நேற்று காலை மீன்படிக்க சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News