உள்ளூர் செய்திகள்
திருமழிசையில் குடிபோதையில் தகராறு- தொழிலாளி படுகொலை
- வாலிபர்கள் பூபதியை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
- போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் பூபதி (50). கூலித்தொழிலாளியான இவர் சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை திருமழிசை முத்து ராஜா 3-வது தெருவில் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சில வாலிபர்கள் பூபதியை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.