உள்ளூர் செய்திகள் (District)
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக சரிவு
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
- இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.