உள்ளூர் செய்திகள் (District)

கயத்தாறு அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் வீடுகள் இடிந்து சேதம்

Published On 2024-09-29 08:45 GMT   |   Update On 2024-09-29 08:45 GMT
  • மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது.
  • அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மாலை பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றில் அங்குள்ள ஓட்டு வீடுகளில் ஓடுகள் தூக்கி வீசப்பட்டது. சுப்பிரமணியன், ஜோதி, சுடலை, பெருமாள், மகரஜோதி ஆகியோரது வீடுகளின் சுவர் மற்றும் ஓடுகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும் மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர். பொருட்கள் மட்டும் சேதமடைந்தது. ஓடுகள் உடைந்த வீட்டினை தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்விரவிக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாபாண்டியன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

Tags:    

Similar News