உள்ளூர் செய்திகள் (District)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-03-21 07:45 GMT   |   Update On 2023-03-21 07:45 GMT
  • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
  • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு ஒரு மாதமாக நீர்வரத்து 1000 கனஅடியாக தண்ணீர் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News