காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்துக் கொலை
- மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30). மாற்றுத்திறனாளி. நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை காஞ்சிபுரம்,மேட்டு தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரில் குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக ரங்கசாமி குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் முன்விரோதம் காரணமாக குமார் கல்லால் அடித்துக் கொல்லப் பட்டாரா? அல்லது குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.