ஆதரவாளர்களுடன் இன்று ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை
- எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
- இந்த நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. கடந்த 9 நாட்களாக அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கருத்து வலுத்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை என்பதை எதிர்த்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.