உள்ளூர் செய்திகள்

24-ந்தேதி எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

Published On 2022-12-14 09:05 GMT   |   Update On 2022-12-14 09:05 GMT
  • மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
  • அதைத்தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்று மரியாதை செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News