தமிழ்நாடு

தமிழக பாஜக-வினருக்கு அண்ணாமலையின் வேண்டுகோள்...

Published On 2024-09-20 03:24 GMT   |   Update On 2024-09-20 03:24 GMT
  • அருமை சொந்தங்களே... கடந்த சில நாட்களாக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள் களத்தில்...
  • ஒரு பூத்தில் குறைந்தது 200 சொந்தங்கள் இணைய வேண்டும்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளார். அதனால் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டள்ள மூத்த தலைவர் எச்.ராஜா கட்சியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை பாராட்டு பெற்றாலும் பெரும்பாலும் கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாமலை லண்டனில் இருந்தபடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அன்பு தலைவர்களே... தொண்டர்களே... நண்பர்களே... அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நிச்சயமாக நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கட்சி பணியும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். அருமை சொந்தங்களே... கடந்த சில நாட்களாக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள் களத்தில்... பாரதிய ஜனதா கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக... புதியவர்களை நம்மோடு இணைப்பதற்காக... இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் அன்பான கோரிக்கை... நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு... ஒரு பூத்தில் குறைந்தது 200 சொந்தங்கள் இணைய வேண்டும்.. இது பெரிய இலக்காக இருந்தால் கூட நிச்சயம் நம்மால் செய்து காட்டக்கூடிய இலக்கு. நம்மால் நிச்சயமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு நம்முடைய கட்சி தலைமை அளித்திருக்கக்கூடிய இலக்கு. புதியவர்களை இணைக்கும் பணியே தான் நாம் முக்கிய கட்சி பணியாக வைத்திருக்கிறோம். இதனால் வேறு எந்த கட்சி பணியும் செய்யவில்லை. அதனால் இந்த நேரத்தில் இந்த குழுவின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய மூத்த தலைவர் எச்.ராஜா முனைப்போடு செயல்பட்டு வருகிறார். எல்லோரும் அவரோடு கைகோர்த்து களத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Similar News