உள்ளூர் செய்திகள் (District)

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய புதுவை வாலிபர்கள் கைது

Published On 2023-04-30 05:45 GMT   |   Update On 2023-04-30 05:45 GMT
  • பண்ருட்டி டி.எஸ்.பி. சிறப்பு படைபோலீசார் பண்ருட்டி அண்ணா கிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயம் கடத்திவந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது பாகூர் பரிக்கல்பட்டு கார்த்தி, மணிவேல் என தெரியவந்தது.

பண்ருட்டி:

பண்ருட்டி டி.எஸ்.பி. சிறப்பு படைபோலீசார் பண்ருட்டி அண்ணா கிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயம் கடத்திவந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது புதுவை மாநிலம் பாகூர் பரிக்கல்பட்டு கார்த்தி (வயது 24) மணிவேல் (24) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்து 100 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News