உள்ளூர் செய்திகள் (District)

பொத்தேரியில் சாலைதடுப்பு சுவரில் கார் மோதி இளம்பெண் பலி

Published On 2023-05-19 08:15 GMT   |   Update On 2023-05-19 08:15 GMT
  • கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
  • விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

வடபழனியை சேர்ந்தவர் நிவேதா (வயது21). மறைமலை நகரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இவர் இன்று அதிகாலை உடன் வேலைபார்த்து வரும் நண்பர்கள் மனோஜ்குமார், சொர்ணரூபினி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு காரில் சென்றார். காரை அனுஷ் கண்ணன் என்பவர் ஓட்டினார். பொத்தேரியில் உள்ள கல்லூரி எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு சம்பவம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தநர் மாணிக்கம் (57). இவர் ஒரகடம் சாலை சந்திப்பு அருகே ஜி.எஸ்.டி.சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது செங்கல்பட்டு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News