உள்ளூர் செய்திகள் (District)
சொத்து தகராறில் தங்கையால் தீவைத்து எரிக்கப்பட்ட அண்ணன் பலி
- வீட்டில் உள்ள அறையில் தூங்கிய முனிரத்தினம் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தனலட்சுமி சென்று விட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர்.
கொளத்தூர்:
பெரம்பூர், சபாபதி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம்(வயது63). இவருக்கு குழந்தை இல்லை. இவரது வீட்டின் கீழ் தளத்தில் தங்கை தனலட்சுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணன்-தங்கை இடையே சொத்து தொடர்பாக பிரசனை இருந்து வந்தது.
நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் தூங்கிய முனிரத்தினம் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தனலட்சுமி சென்று விட்டார். இதல் உடல் கருகிய முனிரத்தினத்தை மீட்டு கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி முனிரத்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர்.