உள்ளூர் செய்திகள் (District)

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் புழல் ஜெயிலில் கைதி திடீர் மரணம்

Published On 2023-04-22 10:18 GMT   |   Update On 2023-04-22 10:18 GMT
  • ராதாகிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
  • சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

செங்குன்றம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள ஏரிக்கரை பாக்கம், மேல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது66). இவர் கடந்த 2001-ம் ஆண்டில் ஒரு பாலியல் வழக்கில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற ராதாகிருஷ்ணன் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News