உள்ளூர் செய்திகள் (District)
- விபத்தில் ரவி வர்மா பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
- கார் டிரைவர் சம்சுதீன் கைது செய்யப்பட்டார்.
சென்னை:
சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவி வர்மா. 60 வயது முதியவரான இவர் தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி வர்மா பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக கார் டிரைவர் சம்சுதீன் கைது செய்யப்பட்டார். இந்த கார் ஜவுளி கடை அதிபர் ஒரு வருடையது என்பது தெரிய வந்துள்ளது.