உள்ளூர் செய்திகள் (District)
அரசு பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு
- ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள அறைக்கதவை உடைத்து அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், மற்றும் பொருட்களை திருடி தப்பி சென்று விட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி நேரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் பள்ளியை மூடிச்சென்றனர். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள அறைக்கதவை உடைத்து அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், மற்றும் பொருட்களை திருடி தப்பி சென்று விட்டனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டார்குப்பம் மகளிர் குழு கட்டிட கதவை உடைத்து கம்ப்யூட்டர் திருடு போனது. மேலும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்த சிலிண்டர், கேஸ் அடுப்பு, மின் அடுப்பு ஆகியவற்றையும் கொள்ளை கும்பல் திருடி சென்று உள்ளனர். தொடர்ந்து கைவரிசை காட்டி வரும் கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.