உள்ளூர் செய்திகள்

வேடசந்தூரில் பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர் கைது

Published On 2023-05-16 05:24 GMT   |   Update On 2023-05-16 05:24 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • கள்ளக்காதல் பிரச்சினையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28). இவர் பெங்களூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த சில மாதங்களாக சொந்தஊருக்கு வந்துவிட்டார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஜோதிலட்சுமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் காளிதாசுடன் ஒன்றாக வசித்து வந்தார். ஜோதிலட்சுமியின் தங்கை உஷாராணி என்பவருக்கும், அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்கோவில்தெருவை சேர்ந்த கணேசன்(30) என்ற பெயிண்டருன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் மதுரையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். நேற்று கணேசன் மற்றும் உஷாராணி ஆகியோர் வேடசந்தூருக்கு வந்தனர்.

இரவில் கணேசன் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றனர். அப்போது கணேசனிடம் உஷாராணியை விட்டுவிடும்படி காளிதாஸ் அறிவுரை கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கணேசன் இதுகுறித்து உஷாராணியிடம் செல்போனில் கூறியுள்ளார். அவர் சம்பவ இடத்திற்கு பைக்கில் வந்துள்ளார். அதற்குள் கணேசன் மற்றும் காளிதாஸ் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசன் தன் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து காளிதாசின் கழுத்தில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கணேசனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News