உள்ளூர் செய்திகள் (District)

வியாசர்பாடியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்

Published On 2023-01-30 06:50 GMT   |   Update On 2023-01-30 06:50 GMT
  • புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.
  • வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆர்.கே.நகர்:

வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக்(38) ஆர்.டி.ஓ.அலுவலக ஏஜெண்டாக வேலை பாத்து வந்தார்.

வீட்டில் இருந்த போது குடும்பத்தினர் கார்த்திக்கிற்கு புரோட்டா வாங்கி கொடுத்தனர். அதனை கார்த்திக் சாப்பிட்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடல் நிலை மோசம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பலியானார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

புரோட்டா சாப்பிட்டதால் கார்த்திக் பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்று மர்மமாக உள்ளது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News