உள்ளூர் செய்திகள் (District)

வடபழனியில் 3 கடைகளில் கொள்ளைடித்த வாலிபர் கைது

Published On 2022-07-18 08:42 GMT   |   Update On 2022-07-18 08:42 GMT
பெட்டிக் கடை உள்ளிட்ட 3கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை நடந்தது.

போரூர்:

வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள மளிகை கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட 3கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை நடந்தது. இதுகுறித்து வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ஷெரிப்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே வடபழனி, விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News