உள்ளூர் செய்திகள் (District)

பாலாலய விழாவில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

வதான்யேஸ்வரர் கோவிலில் பாலாலய திருப்பணிகள் தொடக்கம்

Published On 2022-12-14 10:07 GMT   |   Update On 2022-12-14 10:07 GMT
  • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
  • கோபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கடைசியாக 2004-ஆம் ஆண்டு 26-வது குரு மகா சன்னிதானத்தின் அருளாட்சி காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று பாலாலய விழா நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அடிக்கல் எடுத்து வைத்து திருப்பணிகளை தொடக்கி வைத்தார்.

முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பின்னர், கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை கோயில் அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்து வைத்தார்.

இதில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத கட்டளை விசாரனை தம்பிரான் சுவாமிகள் வள்ளலார் கோயில் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், செந்தில்குமார், ரங்கராஜன், வாஞ்சிநாதன், தர்மபுரம்‌ கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சுவாமிநாதன், திருக்கோயில் சிப்பந்திகள் மற்றும் நகர முகவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News