உள்ளூர் செய்திகள் (District)

தாளவாடி அருகே யானை மிதித்து பூசாரி மரணம்

Published On 2023-02-17 05:42 GMT   |   Update On 2023-02-17 05:42 GMT
  • தாளவாடி வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தேக்கு மர டிப்போ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • வனத்துறையினர் விசாரணையில் இறந்து போன முதியவர் தாளவாடி அருகே உள்ள பாலப்படுகை கிராமத்தை சேர்ந்த மாதேவன்.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் வன விலங்குகள் அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீர்காகவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில சமயம் காவலில் இருப்பவர்களை தாக்கும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடி வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தேக்கு மர டிப்போ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யானை தாக்கி முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்தார்.

உடனடியாக வனத்துறையினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது முதியவர் பரிதாபமாக இறந்தார்.

வனத்துறையினர் விசாரணையில் இறந்து போன முதியவர் தாளவாடி அருகே உள்ள பாலப்படுகை கிராமத்தை சேர்ந்த மாதேவன் (66) கோவில் பூசாரி என்பதும், இவர் விறகு எடுக்க சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். விறகு எடுக்க சென்ற இடத்தில் யானை மிதித்து இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து தாளவாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த மாதவன் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News