உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே உலா வந்த ஒற்றை யானை
- மாரண்டஅள்ளி பகுதியில் ஐந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாந்தோப்பில் தஞ்சம் அடைந்தன.
- இன்று காலை அந்த ஒற்றை யானை தருமபுரி சவுளூர் அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம் கரும்பு தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது.
தருமபுரி,
கடந்த 5 மாதங்களாக பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி மனிதர்களுக்கு அச்சுறு த்தலை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக மாரண்டஅள்ளி பகுதியில் ஐந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாந்தோப்பில் தஞ்சம் அடைந்தன.
இந்நிலையில் யானைகள் நேற்று அருகே உள்ள ஏரிகளில் ஆனந்த குளியல் போட்டு வந்தது.
இதையடுத்து இன்று காலை அந்த ஒற்றை யானை தருமபுரி சவுளூர் அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம் கரும்பு தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், யானையை விரட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற னர்.