உள்ளூர் செய்திகள்

விபத்தில் குழந்தையை காப்பாற்றி உயிரை விட்ட தாய்

Published On 2022-10-15 09:26 GMT   |   Update On 2022-10-15 09:26 GMT
  • பைக் மீது அடையாளம் வாகனம் மோதி விபத்து
  • ஆஸ்பத்திரிக்கு சென்ற போது பரிதாபம்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (வயது 48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. ஆஞ்சிநேயன் சந்திரலேகா மற்றும் 3 மாத கை குழந்தையை ஆஸ்பத்திரிக்கு பைக்கில் அழைத்து சென்றார்.

வேலூர் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது சுண்ணாம்புகுட்டை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் ஆஞ்சிநேயன், சந்திரலேகா படுகாயம் அடைந்தனர். சந்திரலேகா தனது கையால் குழந்தையை கீழே விழாமல் எந்த வித காயமின்றி காப்பாற்றினார்.

இதில் படுகாயம் அடைந்த ஆஞ்சிநேயன் சந்திரலேகாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சந்திரலேகாவை தருமபுரி அரசு மருத்துவக்மனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சந்திரலேகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சந்திரலேகா வின் தாயார் ஜெயந்தி நாட்டற ம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News