உள்ளூர் செய்திகள்
நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்த காட்சி.
கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்
- நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
வாணியம்பாடி காந்திநகர் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 23வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி குமார் தலைமையிலான சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.