உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

உடுமலை ஒன்றியத்தில் தேசிய ஊரக திட்ட தொழிலாளர்களுக்குநிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை

Published On 2023-11-05 10:30 GMT   |   Update On 2023-11-05 10:30 GMT
  • தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
  • நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பி.டி.ஓ., விடம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதமாக வேலைக்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை காலத்தில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News