செம்பனார்கோவிலில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
- கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆனையரிடம் வழங்கினர்.
தரங்கம்பாடி:
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் லெட்சுமி, செம்பை ஒன்றிய அமைப்பாளர் ராஜாபிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் செல்வராஜ், ஒன்றிய அமைப்பாளர் கண்ணன், தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி வேலைத்திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆனையரிடம் வழங்கினர்.