உள்ளூர் செய்திகள்
அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூரில் அடிமுறை பயிற்சி
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
- சான்றிதழ் வழங்கப்பட்டது
வேலூர்:
சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் அடிமுறை பயிற்சி முகாம் இன்று நடந்தது.
முகாமிற்கு அருங்காட்சி யக காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 83 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளுக்கு போதி தர்மா கலைப் பள்ளி சார்பில் பயிற்சி சிபிராஜ் அடிமுறை பயிற்சியான சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். பிடிவர்மம் குறித்து சித்த வைத்தியர் கோபி பயிற்சி அளித்தார்.
இதையடுத்து ஓவிய பயிற்சியாளர் ஓவியம் வரைவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் கலந்து கொண்ட 83 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.