உள்ளூர் செய்திகள்

வெல்டிங் தொழிலாளி கொலை?

Published On 2023-09-12 09:23 GMT   |   Update On 2023-09-12 09:23 GMT
  • ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு
  • போலீசார் விசாரணை

வேலூர்:

காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள கோரப்பட்டரை பகுதியியை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் குணசேகரன் (வயது 23). இவர் தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இன்று காலை அவரது பெற்றோர் குணசேகரனை தேடி சென்றனர். அப்போது அவர் கோரப்பட்டரை பகுதி சாலை ஓரத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் குணசேகரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் முதல் கட்ட விசாரணையில், நேற்று இரவு குணசேகரன், சம்பவ இடத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்துள்ளது. அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News