உள்ளூர் செய்திகள் (District)

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2024-09-25 13:12 GMT   |   Update On 2024-09-25 13:12 GMT
  • நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சோதனை நடத்தப்பட்டது.
  • சோதனையின் போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

விழுப்புரம்:

விழுப்புரம் சென்னை சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்ப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள், லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் போலீசார் இன்று காலை 11.50 மணிக்கு ஜீப்பில் அங்கு சென்றனர்.

அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் தான் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது தெரியவரும்.

Tags:    

Similar News