உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி மாநாடு: போலீஸ் கேட்ட 21 கேள்விகள்... சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை

Published On 2024-09-03 05:58 GMT   |   Update On 2024-09-03 06:18 GMT
  • 21 கேள்விகளை கேட்டு புஸ்சி ஆனந்துக்கு டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம்.
  • போலீஸ் அனுமதி கிடைக்காததால் தாமதமாகி உள்ளது.

சென்னை:

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வரும் விஜய் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் 22-ந் தேதி கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடி மற்றும் பாடலை அவர் அறிமுகம் செய்தார்.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று மனு அளித்தார்.

கடந்த மாதம் 28-ந் தேதி அளிக்கப்பட்ட இந்த மனுவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. சுமார் 1½ லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமலை, டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி வி.சாலை பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாநாடு நடைபெறும் இடம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்து உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருத் போலீசார் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்று கூறியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக 21 கேள்விகளை கேட்டு விஜய் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்துக்கு டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மாநாடு நடை பெறும் இடத்தில் எத்தனை பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்படு கின்றன? மாநாட்டில் பங்கேற்க உள்ள முக்கிய பிரமுகர்கள் யார்-யார்? என்கிற தகவல்களை தெரி விக்குமாறு கேட்டுள்ளனர்.

மாநாட்டுக்கு வருகை தர உள்ள பெண்கள், குழந்தை கள் எத்தனை பேர்? மாநாட்டுக்கு வருபவர்க ளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள னவா? சாப்பாடு பொட்ட லங்களாக வழங்கப்படு கிறதா? இல்லை அங்கேயே சமைத்து வழங்கப்படுகி றதா? என்பது போன்ற கேள்விகளும் போலீசார் அனுப்பிய நோட்டீசில் இடம் பெற்றிருந்தன.

இதைத் தொடர்ந்து போலீசார் கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு முறைப்படி பதில் தயாராகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்தாலோ சித்து பதிலை தயாரித்துள்ள னர். இதனை விஜய்யிடம் காண்பித்து நேற்று ஆலோ சனை நடத்தி உள்ளனர். அப்போது சட்ட நிபுணர் களுடனும் விஜய் ஆலோ சனை மேற்கொண்டார்.

கட்சியினர் தயாரித்து கொடுத்த 21 கேள்விகளுக் கான பதிலையும் விஜய் பொறுமையாக படித்து பார்த்து அனுமதி வழங்கி உள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த பதில் மனு வருகிற வெள்ளிக்கிழக்குள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது.

கட்சியின் மாநில பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பதில் மனுவை அளிக்கிறார்.

விஜய் கட்சியின் இந்த பதில் மனுவை வாங்கிக் கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் அதனை முழுமையாக படித்து பார்த்து மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக நாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் அளிக்கிறார்கள்? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

இதன் பிறகு பதில் மனுவில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்த்து மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுப்போம் என்றார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறும்போது, மாநாட்டுக்கான பணிகள், போலீஸ் அனுமதி கிடைக்காததால் தாமதமாகி உள்ளது. எங்களது பதில் கடிதத்தை ஏற்றுக் கொண்டு போலீசார் அனுமதி வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News