உள்ளூர் செய்திகள்

கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

Published On 2023-04-17 07:08 GMT   |   Update On 2023-04-17 07:08 GMT
  • கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது.
  • இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது.

விருதுநகர்

சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி(29). இவர் அண்ணாநகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது. இங்கு உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மர்மநபர்கள் உண்டியலை எடுத்துச்சென்று அதில் இருந்த பணத்தை திருடிவிட்டனர். இதுபற்றி அறிந்த பால்பாண்டி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News