உள்ளூர் செய்திகள்

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2023-05-26 08:21 GMT   |   Update On 2023-05-26 08:21 GMT
  • புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
  • ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மாரிகுண்டாம்பட்டி பகுதியில் உள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மாரிச்சாமி(48) என்பவது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு தடைசெய்யப்பட்ட ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த 457 புகையிலை பாக்கெட்டுகள், ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த மாரிச்சாமி, புகையிலை பாக்கெட்டுகளை வாங்கி செல்வதற்காக வந்த சித்துராஜபுரத்தை சேர்ந்த ராமசாமி(40), சாத்தூர் நடுவப்பட்டியை சேர்ந்த மனோகரன்(40) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News