செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு
- செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு ரெயிலுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ரெயில் நிலைய அதிகாரி ஜெயபால் உள்பட பலர் பாராட்டப்பட்டனர்.
ராஜபாளையம்
தீபாவளியொட்டி தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரெயில் இன்று முதல் தொடங்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து வந்த சிறப்பு ரெயிலுக்கு ராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில்வே பயனாளர்கள் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணன் தலைமையில் என்ஜினுக்கு வாழை மரக்கன்றுகள், மாலை அணிவித்து ரெயில்வே டிரைவர் ராமர், துணை டிரைவர் அருள்ராஜ், கார்டு இளங்கோ ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினர்.
ரெயில் பயனாளர்கள் சங்க செயலாளர் ஹரி, தொழில் வர்த்தக சங்கத் துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் நாராயண சாமி, செயற்குழு உறுப்பினர் வாசுதேவ ராஜா மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
ரெயில் நிலைய அதிகாரி ஜெயபால் உள்பட பலர் பாராட்டப்பட்டனர்.