உள்ளூர் செய்திகள்

ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-08-03 08:55 GMT   |   Update On 2022-08-03 08:55 GMT
  • விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆகிேயார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்பொழுது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான ஜவுளிபபூங்காக்கள் அமைப்பதன் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை சிவகங்கை மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 39, விஸ்வநாதபும் மெயின்ரோடு, மதுரை-14 என்ற முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்.94435 55581.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News