உள்ளூர் செய்திகள் (District)

தி.மு.க.வோடு இணக்கமாகவே இருக்கிறோம்- செல்வபெருந்தகை

Published On 2024-05-18 09:44 GMT   |   Update On 2024-05-18 09:44 GMT
  • கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை.
  • கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது.

கோவை சிந்தாமணிபுதூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தை வலிமைப்படுத்துவது என்பது வேறு. தமிழக அளவில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் சின்ன, சின்ன கட்சிகள் கூட நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகின்றன.

காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது, கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. 57 ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறோம். தற்போது மீண்டும் அந்த முயற்சியை எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

நாங்கள் தி.மு.க.வுடன் தோழமையோடு இருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவது வேறு, தோழமை என்பது வேறு. இந்த இரண்டையும் நீங்கள் ஒன்றாக பார்க்க கூடாது. நாங்கள் தி.மு.க.வோடு இணக்கமாக இருக்கிறோம். எனவே கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News