உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் இளம்பெண் திடீர் தற்கொலை

Published On 2022-10-06 09:29 GMT   |   Update On 2022-10-06 09:33 GMT
  • சீதாலட்சுமி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
  • உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை,

நீலகிரி மாவட்டம் குண்டாலடியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் சீதாலட்சுமி (வயது 22).

இவர் பீளமேடு ராமலிங்க அடிகளார் நகரில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ந் தேதி இவர் நிறுவனத்தில் நடந்த ஆயுத பூஜைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

வீட்டில் இருந்த போது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் சீதா லட்சுமி நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் அறைக்கு சென்ற அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சீதாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News