கதம்பம்

உயிர் காக்கும் மருந்துகள்.!

Published On 2024-07-01 11:00 GMT   |   Update On 2024-07-01 11:00 GMT
  • இஞ்சி சாறு சுடுநீரில் கலந்து தேன் கலந்து சாப்பிட குடல் புண்கள் சரியாகும்.
  • சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க ஜீரணத்தை அதிகரிக்கும்.

எலுமிச்சை பழம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய், வெந்தயம், விளக்கெண்ணெய், கிராம்பு, பட்டை..

இவை எல்லாமே நாள்பட்ட பல நோய்களையும் பல தீவிர உடல் தொந்தரவுகளையும் குறைக்கக்கூடிய மருந்துகள்...

சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க உடலில் நீர்ச்சத்து அதிகமாகும்..

பூண்டு ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த நாள அடைப்புகளை சரி செய்யும்.

இஞ்சி சாறு சுடுநீரில் கலந்து தேன் கலந்து சாப்பிட குடல் புண்கள் சரியாகும்.

மிளகு நாள்பட்ட சளியை முறிக்கும் ..

சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க ஜீரணத்தை அதிகரிக்கும்.

சிவப்பு மிளகாய் ரத்தத்தை நீர்மம் ஆக்கி உடல் உட்புற காயங்களையும் ரத்த நாள காயங்களையும் சரி செய்யும்..

வெந்தயம் இரவில் வாயில் போட்டு தண்ணீர் குடித்து வர உடல் சூட்டை தணித்து அடி வயிற்று வலி, மூலம், பௌத்திரம் போன்ற தொந்தரவுகளை சரி செய்யும்...

விளக்கெண்ணெய் 10 மில்லி பூண்டுடன் சாப்பிட்டு வர பித்தப்பை கற்கள், அடி வயிற்று வலி இன்னும் அனைத்து வகையான உடல் சூடு பிரச்சனைகளும் சரியாகும்..

கிராம்பு உடல் சூட்டை சரி செய்து ஓட்டத்தை சீராக்குகிறது..

பட்டை ரத்தத்தை சுத்தி படுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.

மரபு மருத்துவம் எளிமையானதாக இருக்கிறது .நோயைப் பற்றிய பயமே மனிதனை மருந்துகளுக்கு அடிமை ஆக்குகிறது.

-ரியாஸ்

Tags:    

Similar News