கதம்பம்

ஜவ்வாது எப்படி கிடைக்கிறது

Published On 2024-06-24 10:45 GMT   |   Update On 2024-06-24 10:45 GMT
  • வனத்துறைச் சட்டப்படி இத்தகைய பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது.
  • நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான்.

"ஜவ்வாது எப்படி தயாரிக்கப்படுகிறது?" குறிப்பிட்ட பூனை விலங்கிடமிருந்துதான் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இந்த "பிசினை" தூய சந்தனப் பவுடரை கலந்து விட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். மிக பெரிய ஆகர்ஷன சக்தி கொண்ட பொருளாக மாறும். இதுதான் தூய ஜவ்வாது.

வனத்துறைச் சட்டப்படி இத்தகைய பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்... போன்ற நாடுகளில் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்றும் கஞ்சமலை போன்ற காடுகளில் இந்த இன பூனைகள் இருக்கிறது. அங்குள்ள குரவர்கள் மூலம் தூய ஜவ்வாது இன்றும் கிடைக்கிறது.

- சிவசங்கர்

Tags:    

Similar News