null
- அசைந்து கொடுக்காமல் வலியும் வேதனையும் இருந்து கொண்டே இருக்கும்.
- இறுதியில் ஆபரேஷன் செய்வதுதான் நிரந்தர தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
கால்சியம் மற்றும் கிரியேட்டின் அதிகமாவதால் சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு, இதனால் பல உபாதைகளுக்கு ஆளாகி என்ன செய்வது என்று தெரியாமல்.. யார்யாரெல்லாம் என்னென்ன மருந்துகளையெல்லாம் சொல்கிறார்களோ அதனை எல்லாம் முயற்சித்து பார்த்து இருப்பீர்கள்.. சிலர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கல்லை கரைக்க மருந்து உட்கொண்டு வருவீர்கள்..ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் வலியும் வேதனையும் இருந்து கொண்டே இருக்கும். இறுதியில் ஆபரேஷன் செய்வதுதான் நிரந்தர தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள்...
சரி..ஆபரேஷன் செய்தாச்சு..கல் மீண்டும் உருவாகாமல் இருக்குமா..என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல இயலாது..காரணம் மீண்டும் கல் உருவாகும்...இது ஓர் தொடர் கதை மாதிரி சென்று கொண்டே இருக்கும்..இதற்கு ஒரு முடிவு இல்லையா..என ஏங்கி நிற்கும் ஏழைகளும் நடுத்தர வாதிகளும் தான் அதிகம்...
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் வெண்டைக்காய்,தக்காளி,பசலைக்கீரை,போன்ற கால்சியம் அதிகம் உள்ள பொருட்களை குறைவாக சாப்பிட வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்... ஆபரேஷன் செய்து இருந்தாலும் சரி...செய்யவில்லை என்றாலும் சரி..சிறுநீரகத்தில் உள்ள கல்லை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்ற மிக எளிமையான தேனீர். இதனை காலை மாலை இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வந்தால் போதும்.. கல்லும் கரையும்..அதன் மூலம் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்..
மூக்கிரட்டை இலை 25 கிராம்
சிறுபீளை இலை 25 கிராம்
நெருஞ்சில் 25 கிராம்
இலவங்கப்பட்டை பொடி 2 கிராம்
அனைத்தையும் 300 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து தண்ணீர் 100 மில்லி ஆனதும் வடிக்கட்டி காலை இரவு சாப்பாட்டிற்கு பிறகு தினமும் குடித்து வரவும்..எப்படிப்பட்ட கல்லாக இருந்தாலும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
-செந்தில் குமார்