கதம்பம்

அவர் ஏற்கெனவே சொல்லிட்டார்!

Published On 2024-07-19 08:15 GMT   |   Update On 2024-07-19 08:16 GMT
  • நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா.
  • முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.

'கன்பூசியஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?'

'இன்னா சொல்லிக்கிறார்?'

'வேலைக்காரன் மீது சந்தேகப்படாதே. சந்தேகத்துக்குரிய நபரை வேலைக்காரனாக வைத்துக் கொள்ளாதே' அப்படின்னு சொல்லியிருக்கிறார். என்ன அருமையா சொல்லி இருக்கிறார் பாருங்க'

'அட. இதை நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா. 'தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்'

'சரி. இயேசு கிறிஸ்து பைபிள்ல என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?'

'என்ன சொல்லியிருக்கிறார்?'

'ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு… செய்தாயிற்று'

'அட. இதேமாதிரி திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்பா. 'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்'

'நெப்போலியன் போனபார்ட் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? (இன்னும் முடியலையா?)

''என்ன சொல்லியிருக்கிறார்?'

'முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. அப்போதுதான் கட்டளையிடுவது எப்படி என்பதை நீ கற்றுக்கொள்ள முடியும்னு சொல்லியிருக்கிறார்'

'அடேங்கப்பா. இதையும் நம்ம திருவள்ளுவர் ஏற்கெனவே சொல்லிட்டார். 'நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது'

அதாவது நுணுக்கமாக அடுத்தவர் பேசுவதைக் கேட்டு யார் ஒருத்தர் உள்வாங்குகிறாரோ நாளைக்கு அவர் பேசுறதைப் பார்த்து அடுத்தவங்க வணங்குற அளவுக்கு அவரோட பேச்சு இருக்கும் அப்படின்னு இதற்கு அர்த்தம்.

-மோகன ரூபன்

Tags:    

Similar News