இந்தியா

கேரளாவுக்கு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2023-06-15 03:47 GMT   |   Update On 2023-06-15 03:47 GMT
  • விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
  • பேஸ்ட் வடிவில் தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவுக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் கேரளா வரும் விமானங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நெடும்பாச்சேரி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தை சோதனை செய்தனர். அப்போது பயணிகள் அமரும் இருக்கைக்கு அருகே ஒரு குழாய் கிடந்தது. அதில் பேஸ்ட் வடிவில் தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஒரு கிலோ தங்கம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News