இந்தியா

அகிம்சை பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை: எமர்ஜென்சி, சீக்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டி அமித் ஷா பதில்

Published On 2024-07-01 10:17 GMT   |   Update On 2024-07-01 10:17 GMT
  • தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள்.
  • பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல- ராகுல் காந்தி

இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, "தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல. கடவுள் பரமசிவன் படத்தை காட்டி அச்சமின்றி தைரியமாக இருப்பது, அகிம்சை குறித்து பேசினார். மற்ற மதங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன" என்றார்.

இவ்வாறு பேசிய ராகுல் காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வகளை இந்த கருத்து புண்படுத்துவதாகவும், இதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனறும் வலியுறத்தினார்.

மேலும் எமர்ஜென்சி, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அமித் ஷா, நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பியபோது, அகிம்சை பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என்றார். கடவுள் சிவன் படத்தை காட்டியபோது, சபாநாயகர் ஓம் பிர்லா இதுபோன்ற படங்களை காட்டுவதற்கு மக்களவையில் அனுமதி கிடையாது என சுட்டிக்காட்டினார்.

Tags:    

Similar News