இந்தியா

உண்மையை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு- பிரதமர் மோடி

Published On 2024-07-03 08:08 GMT   |   Update On 2024-07-03 08:08 GMT
  • மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதத்திற்கு தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கின்றனர்.
  • பாராளுமன்றத்தில் அமளி செய்வதை தவிர வேறு எதுவும் எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாது.

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி தவறான தகவல்களை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு பேச வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

* பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் நான் கூறும் உண்மைகளை எதிர்கொள்ள முடியவில்லை.

* உண்மையை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

* மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதத்திற்கு தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கின்றனர்.

* பாராளுமன்றத்தில் அமளி செய்வதை தவிர வேறு எதுவும் எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாது.

* நான் பேசும் உண்மைகளை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை என்று கூறினார்.

Tags:    

Similar News