என் மலர்
நீங்கள் தேடியது "Rahul Gandhi"
- பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே மொத்த உற்பத்தி.
- அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திaல் கூறியிருப்பதாவது:-
மோடி அரசின் கீழ் மொத்தமாக ஏதாவது உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அது பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே.
அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்... அப்போதுதான் வலுவான இந்தியா, பொருளாதாரம், வேலைவாய்ப்பை கட்டமுடியும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்றார்.
புதுடெல்லி:
கேரள மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற முடியாத காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியாவது வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரின் செயலால் அம்மாநில காங்கிரசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்தில் ஆளுங்கட்சியை பாராட்டி பேசியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு நடத்தியதற்காக பிரதமர் மோடியையும் பாராட்டியுள்ளார். இதனால் கேரள காங்கிரசார் செய்வதறியாது திகைத்தனர்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தங்கள் முன் உள்ள சவாலுக்காக அனைவரும் ஒற்றுமையாக நிற்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.
- எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, அரசியலமைப்பை காப்பதற்கான உறுதிப்பாட்டில் தொடர்ந்து ஒன்றாக நிற்போம்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, அரசியலமைப்பை காப்பதற்கான உறுதிப்பாட்டில் தொடர்ந்து ஒன்றாக நிற்போம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Wishing a very happy birthday to my brother and Tamil Nadu Chief Minister, Thiru @mkstalin.We continue to stand together in our commitment to preserve India's rich diversity, federal structure, and Constitutional values.May you have good health and continued success in…
— Rahul Gandhi (@RahulGandhi) March 1, 2025
- இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
- சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன.
இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,
இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.
ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பகிர்ந்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், "சமூகத்தைப் பிரிக்கும் இத்தகைய மேலோட்டமான முயற்சிகளால் மோசமான நிர்வாகம் ஒருபோதும் மறைக்கப்படாது.
இந்தி பேசும் தொகுதியின் எம்பி என்ற முறையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதை ஏற்றுக்கொள்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Poor governance will never be hidden by such shallow attempts to divide society. It will be interesting to know what the Leader of the Opposition, @RahulGandhi Ji, has to say on this subject. Does he, as MP of a Hindi-speaking seat, agree? https://t.co/Oj2tQseTno
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 27, 2025
- உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
- சுமார் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. சுமார் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
இதற்கிடையே, கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கடைசிவரை ராகுலும், பிரியங்காவும் மகா கும்பமேளாவுக்கு வரவே இல்லை.
இந்நிலையில், கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருகை தராதது ஏன் என துறவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, உ.பி.யின் அமேதியில் உள்ள பரமஹன்ஸ் மடத்தின் துறவி கூறுகையில், கங்கை தாயின் மடியில் அமர்ந்தால் காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அந்த அச்சத்தால் அவர்கள் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை. தங்களது அரசியலைத் தொடரவே இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வருகை தரவில்லை. பிரயாக்ராஜ் அவர்களது சொந்த குடும்ப பூமியாக இருந்தும் அதை உதாசீனப்படுத்தி விட்டனர். இந்தத் தலைவர்கள் சனாதனத்துக்கு எதிரானவர்கள். உலக நாடுகளில் இருந்து பலரும் வந்த மகா கும்பமேளாவுக்கு காங்கிரசார் வராதது ஏன்? என்றனர்.
- தனது எக்ஸ் பக்கத்தில் பூஜை செய்யும் வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
- எங்கும் சிவனே! என்று பதிவிட்டுள்ளார்.
சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் இந்நாளில் சிவனுக்கும், குல தெய்வ கோவில்களிலும் பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவுக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பூஜை செய்யும் வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
போலேநாத் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித பண்டிகையான மகாசிவராத்திரியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
இந்த தெய்வீக சந்தர்ப்பம் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருவதாகவும், மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். எங்கும் சிவனே! என்று பதிவிட்டுள்ளார்.
सभी देशवासियों को भगवान भोलेनाथ को समर्पित पावन-पर्व महाशिवरात्रि की असीम शुभकामनाएं। यह दिव्य अवसर आप सभी के लिए सुख-समृद्धि और उत्तम स्वास्थ्य लेकर आए, साथ ही विकसित भारत के संकल्प को सुदृढ़ करे, यही कामना है। हर-हर महादेव! pic.twitter.com/4gYM5r4JnR
— Narendra Modi (@narendramodi) February 26, 2025
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதவில், அனைவருக்கும் புனிதமான மகாசிவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள்!. சிவசக்தியின் ஆசிகள் உங்கள் அனைவருக்கும் எப்போதும் இருக்கட்டும். எங்கும் சிவன்! என்று தெரிவித்துள்ளார்.
सभी को महाशिवरात्रि के पावन पर्व की हार्दिक शुभकामनाएं!शिवशक्ति की कृपा आप सब पर हमेशा बनी रहे। हर हर महादेव। pic.twitter.com/w2fGK8SLof
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2025
- "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்"
- தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து சசி தரூர் பாராட்டி பேசினார். கேரளாவில் ஆளும் இடது முன்னணி ( எல்.டி.எப் ) அரசின் கொள்கைகளையும் சசி தரூர் பாராட்டி பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநில காங்கிரஸ் சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் கூறியது உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சசி தரூர் சந்தித்து பேசினார்.
அரை மணி நேர சந்திப்பில் ராகுலிடம் தான் சில முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்கூறியதாக சசி தரூர் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்'' என்று மட்டும் கூறிவிட்டு நழுவினார்.
#WATCH | Delhi: On being asked if 'all is well between you and the party', Congress MP Shashi Tharoor says, "No comments at all..." pic.twitter.com/HFZBunujo1
— ANI (@ANI) February 23, 2025
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற சசி தரூர், நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். கட்சிக்காக பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.
கட்சி மாறுவது குறித்த வதந்திகள் உண்மை இல்லை. என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே சசி தரூரை வரவேற்கத் தயாராக இருப்பதாகக் கேரள மாநில சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது. சசி தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்றும் தாங்கள் அவரை வரவேற்போம் என்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சசி தரூருக்காக கட்சி எப்போதும் ஒரு கதவைத் திறந்து வைக்கும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார்.
சமீபத்தில் சசி தரூரின் எக்ஸ் பதிவு ஒன்றும் வைரலானது. 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை சசி தரூர் பகிர்ந்தார். "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்று அந்த கவிதை கூறுகிறது. சசி தரூரும் அதையே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.
- உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும்.
- அதானி விவகாரமானது தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றார்.
லக்னோ:
சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் டிரம்புடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த பிரதமர் மோடி, தனிப்பட்ட பிரச்சனைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ளார். லால்கஞ்சில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
அமெரிக்காவில் அதானி குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட பிரச்சனை என்றும், இரண்டு தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
நரேந்திர மோடிஜி, இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இது நாட்டின் விஷயமாகும்.
உத்தர பிரதேச அரசானது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிட்டது. மத்திய அரசு தனியார் மயமாக்கலை நாடுகின்றது.
உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும் என தெரிவித்தார்.
- ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர்
- ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார்.
ரேபரேலியில் பேரணியின்போது பேசிய அவர், இரண்டு இந்தியாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்காக கொரோனாவின் போது, லட்சக்கணக்கான பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மறுபுறம், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கான இந்தியா உள்ளது. நமக்கு இரண்டு இந்தியாக்கள் இருக்க முடியாது. நமக்கு ஒரே இந்தியா வேண்டும்.
நாம் எப்படி இந்த நிலையை அடைந்தோம்?. மோடி அரசாங்கம் பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் சிறு வணிகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த நாட்டில் ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் இந்த அரசியலமைப்பை நமக்குக் கொடுத்தார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.
இன்று, ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அரசியலமைப்பைத் தாக்குகிறார்கள். யாராவது இந்தியாவைப் பிரிக்க முயற்சித்தால், அதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நாட்டை வெறுப்பு நிறைந்ததாக மாற்றும் அவர்களின் முயற்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த நாடு அன்பின் நாடு, எப்போதும் அன்பின் ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தலித் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஆங்கிலம் பேச மாட்டேன் என்று கூறுகிறார். தலித் மாணவர்கள் ஆங்கிலம் கற்று உயர் இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் எண்ணம். அதிகாரத்துக்கு வர ஆங்கிலம் ஒரு கருவி என்று தெரிவித்தார்.
#WATCH | While interacting with students in Rae Bareli today, Congress MP Rahul Gandhi said, "People from BJP-RSS say that one should not learn the English language. Mohan Bhagwat says we should not speak in English. But the English language is a weapon, if you learn this… pic.twitter.com/VQEVJfEBSO
— ANI (@ANI) February 20, 2025
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எத்தனை தலித் தலைவர்கள் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய ராகுல், இந்த அமைப்பு உங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகிறது, பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் அது உங்களை எப்படித் தாக்குகிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் உங்கள் சித்தாந்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தலித்துகள் இல்லையென்றால், இந்த நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
- உ.பியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
- ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது, " ஆங்கிலத்தில் பேசமாட்டேன் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்" என்றார்.
இதுகுறித்து ராகுலம் காந்தி மேலும் கூறுகையில், " அதிகாரத்தை அடைய ஆங்கிலம் ஒரு கருவி. ஆங்கிலம் மக்களின் மிகப்பெரிய ஆயுதம்.
பட்டியலின, பழங்குடியின மற்றும் ஏழை மக்கள் உயர்ந்த நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆங்கிலம் கற்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் கூறுகிறது.
ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்" என்றார்.
- தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
- புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இருந்து வருகிறர். இவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். வழக்கமாக அவருக்கு அடுத்தப்படியாக உள்ளவர் தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்படுவார். 3-வது நபரை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும்.
பிரதமர் தலைமையிலான குழுவில் பிரதமர், கேபினட் அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இருப்பார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 22-ந்தேதி இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. அதுவரை இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தக்கூடாது என ராகுல் காந்தி தனக்கு இந்த கூட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையத் தலைவர் பதவி காலியிடமாக இருக்கும் என்பதால் தேர்வு செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிப்போட விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் நியமனத்திற்கு தடை விதிக்கவில்லை. மேலும், சட்டப்பூர்வ கருத்து கோரப்பட்டு வழங்கப்பட்டது, பிரதமர் தலைமையிலான குழு தொடர்ந்து செயல்படுமாறு கூறப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான கோப்பிலும், புதிய அதிகாரியை நியமிப்பதற்கான கோப்பிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில் "தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் நியமிப்பது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் வருகிற 22-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் நாங்கள் ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியுடன் சட்டக்குழு இதை ஆதரிக்கிறது. நாம் ஈகோவில் செயல்பட முடியாது, மேலும் உச்ச நீதிமன்றம் முன்கூட்டியே முடிவெடுக்கும் வகையில் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை தன்னுடன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது. அதனுடைய நம்பகத்தன்யை குறித்து கவலைப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளது.
வழக்கமாக பிரதமரின் ஆலோசனைப்படி தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். தலைமை தேர்தல் ஆணையருக்கு கீழ் உள்ள மற்ற இரண்டுபேரில் சீனியர் அடிப்படையில் மூத்த ஆணையர் தலைமை ஆணையராக தேர்வு செய்யப்படுவார். அதன்படி ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
சட்ட அமைச்சர் ஐந்து பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து தேர்வுக்குழுவிற்கு அனுப்புவார். தேர்தல் குழுவில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர், கேபினட் அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள்.
ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக கேபினட் அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
- சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு பதில் அளித்த அவர், "சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக உள்ளது. மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா, "காங்கிரஸ் 40,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தவர்கள். இன்னும் சீனாவின் அச்சுறுத்தலை அவர்கள் காணவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தானின் நலன்களை நமது நாட்டின் நலன்களுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ராகுல் காந்தியின் ரிமோட் கண்ட்ரோல் ஜார்ஜ் சோரஸ் மற்றும் சீனாவின் கைகளில் உள்ளது" என்று தெரிவித்தார்.